Friday 7 November 2014

கால் ஆணிக்கு மருந்து!!!

கால் ஆணிக்கு மருந்து
கால் ஆணிக்கு மருந்து என்ன என்று ஒரு சகோதரர் கேட்டிருந்தார். இதோ ஒருநாட்டு வைத்தியம். முயற்சித்துப் பார்க்கலாமே. நாட்டு 
வைத்தியம்! பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக... 
பித்தவெடிப்பு 
சரியாக... 
பித்தவெடிப்பு வந்தா... கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி 
பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் 
எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரைடம்ளரா 
குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு 
வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை3, 4 
தடவைகூட பயன்படுத்தலாம். 
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு 
பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையைபொடி செஞ்சு, ஒரு 
சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு 
சரியாகும். 
நகச்சுத்து விலக... 
நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி 
இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம் கிடைக்கும். 
வேப்பிலை கொஞ்சம் 
எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு நகச்சுத்து வந்தஇடத்துல 
பூசினா... குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா உரியபலன் 
கிடைக்கும். 
ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி! 
காலத்துக்கு ஏத்த 
மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். 
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை உண்டு,இல்லைனு 
ஆக்கிடும். 
இந்த... கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி 
எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள 
இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற 
அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் 
பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காகஇந்த முரட்டு 
வைத்தியம்? 
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. 
அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி 
வந்தா... அந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும். 
ஒரு செடியை சிறுசு 
சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம் 
கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், 
பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும். 
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு 
கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து, 
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும். 
தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்... துணியைக் காணோம்னுபாய்ஞ்சி 
ஓடிப்போயிரும் ஆணி. 
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு 
மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவுஎடுத்து 
அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணுநாள்ல குணம் 
கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும். 
அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து 
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும். கால் ஆணி நீங்க ...இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு 
மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்


====

கால் ஆணி

கால் ஆணி

மூலிகை பயன்படுத்தும் முன்
சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் "கால் ஆணி ". காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும் செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்,  சென்னையில் இருக்கும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நம் வலைப்பூ நண்பர் விஸ்வநாதன் என்பவர் கடந்த மாதம் தன் காலில் கால் ஆணி "  இருப்பதாகவும் மூன்று மாதமாக பல ஆங்கில மற்றும் சித்த மருந்து எடுத்தும் குணமாகவில்லை என்று கூறி ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறு கூறினார்இயற்கை மேல் முழு நம்பிக்கை உள்ள அவருக்காக அகத்தியரின் குணபாடத்தில் உள்ள ஒரு மூலிகையை கூறி இதை தொடர்ந்து நாட்கள் பயன்படுத்துங்கள் உடனடியாக மாற்றம் இருக்கும் என்று கூறினோம். மருந்து பயன்படுத்தும் முன் "கால் ஆணிஉள்ளதை புகைப்படம் எடுத்து பின் மருந்து பயன்படுத்துங்கள் என்று தெரியப்படுத்தி இருந்தோம்சரியாக நாட்கள் கழித்து நண்பரிடம் இருந்து மெயில் வந்தது அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
அன்பு நண்பருக்கு,முதலில் நன்றி.
தாங்கள் கூறிய மூலிகை மருந்தை எனது வலது காலில் கடைசி இரு விரல்களுக்குமிடையில் மூன்று மாதங்களாக இருந்து வந்த"கால் ஆணிக்கு காலையில் மட்டும் போட்டு வந்தேன். அதிசயம். ஆனால் ஐந்து நாட்கள் போட்டவுடனேயேவலியும் குறைந்து,தற்போது ,நன்கு நடக்கவும் முடிகின்றது. இதற்கு முன்பாக பல மருந்துகள் உபயோகித்தும் பலன் கிடைக்கவில்லை. தற்போது
நன்கு குணமடைந்து விட்டேன்.
மிக்க நன்றி ___________ அவர்களுக்கு. தங்கள் பயன் கருதா தொண்டு வாழ்க.
என்றும் நட்புடன்,விஸ்வநாதன்
சென்னை.
இவர் தெரிவித்த அன்பையும் நன்றியையும் அப்படியே எம் குருநாதரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்இந்த மருந்தைகண்டுபிடித்தவர்கள் சித்தர்கள் அவர்கள் எழுதி வைத்தை சொல்லும் இந்த சாதாரண மனிதனுக்கு எந்த பெருமையும் தேவையில்லை உங்கள் அன்பு மட்டும் போதும். உண்மையான முழு நம்பிக்கையோடு "கால் ஆணிஉள்ளவர்கள் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு
இதற்கான மருந்து இமெயிலில் தெரியப்படுத்தப்படும். மருந்து தெரியப்படுத்தும் முன் பல முறை நன்றி சொல்லும் நபர்கள் குணமடைந்த பின் ஒரு இமெயில் கூட அனுப்பாதது தான் நம் தளத்தில் இருந்து பல அரிய நோய்களுக்கு மருந்து தெரிவிக்க இயலாமல் போகிறது. மருத்துவ உலகமே மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல நோய்களுக்கு ஏற்கனவே சித்தர்கள் மருந்துகண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,  நம் தளத்தின் மூலம் சிலருக்கு மருந்து தெரிவிக்கப்பட்டு முழுமையான குணம் அடைந்துள்ளனர் விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும்.
அன்பருக்கு ,

"கால் ஆணி " - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் "குப்பைமேனி " தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும்

1 comment:

  1. Namaskaram, Could you please tell me about cure for KAL ANI - Agathiya Guna Pada medicine. This is very greatful in my life..My email astroiyegar@gmail.com
    Thanks
    Venkatesan.K

    ReplyDelete