Wednesday 5 November 2014

மைசூர் பாகு!!!


மைசூர் பாகு!

தேவையான பொருட்கள்:-

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ½ கப்
நெய் – 1½ கப்

செய்முறை –

கடலை மாவை வெறும் வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து சூடாக்கவும். அருகில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும். சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும். கொதிக்க ஆரம்பித்த பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் பாகு உருட்ட வர வேண்டும். இப்போ கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும். பாகுடன் மாவு சேர்ந்து வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளற வேண்டும். நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு வாணலியில் ஓரங்களில் நுரை போல பூத்து வரும். இப்போ அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடவும்.

வாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் தயார்.

No comments:

Post a Comment