Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts

Sunday, 9 November 2014

Astrology!!!

டாரட் எண் கணித ஜோதிடம் பார்க்க

WATCH THIS LINK    


கிளி ஜோதிடம் பார்த்து அன்றைய பலனறிய

கிளி ஜோதிடம் பார்த்து  உங்கள்   பலனறியுங்கள்
இந்த  இணைப்பை  அழுத்தி  பாருங்கள்
இங்கு கிளிக்குங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைவரும் எளிமையான முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ள எளிய வழி



ஜோதிடக்கலை என்பது ஒரு அரிய கலையாகும்.ஒரு காலத்தில் மிகப்பெரிய பண்டிதர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த கலை தற்போதைய நவீன யுகத்தில் அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் வந்துவிட்டது.பல ஜோதிட பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.இவற்றிர்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே ஜோதிடம் பயில்வதற்காக இணையத்தில் சுப்பையா வாத்தியார் என்பவர் ஓவ்வொரு பிரிவாக பிரித்து பாடத்தொகுப்பாக வைத்துள்ளார்.இதை படித்து புரிந்து நீங்களும் ஜோதிடராக வாழ்த்துக்கள்

குறிப்பு: முன் ஜென்ம நல்ல காரியம் செய்தவர்களால் தான் இந்த ஜோதிடக்கலையை பயில முடியும்.ஜாதகத்தில் இக்கலையை பயில்வதற்க்கு உரிய யோகமும் இருக்க வேண்டும் அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்

Thursday, 11 September 2014

ஹோரையை அறிந்தவன் ஹீரோ!!!

ஹோரையை அறிந்தவன் ஹீரோ!

ஹோரை பலன்
ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு:
1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது!
2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக இருக்கிறது.
3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில் வெளிப்பட்டு விளங்குகிறது!
4. மனிதனது மனநிலைகளுக்கும், சூழ்நிலைகளின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது!
5. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே நிகழ்வுகளை, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன!!
6. ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை நிகழவே நிகழாது!
7. கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து மனிதனது, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம் மனிதனை தொடர்பு கொள்கிறது!

மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று
1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும் கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக வேண்டும்!
2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்கிறான்!
3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்!
4. ஆனால், ஒரு நாளைக்கு 21,600 தவவைக்கும் மேலான எண்ணிக்கையில் சுவாசிக்கிறான்!!
5. எனவே, மனிதன் கோள்களின் கதிர் அலை (Ray's)கள் நிரம்பியுள்ள, காற்றினை சதா மூக்கினால் சுவாசித்த வண்ணம் இருக்கின்றான்!
6. "மனிதனை" இயக்குவது மனம்!
7. மனதினை இயக்குவது சுவாசிக்கும் காற்று!
8. காற்றினை இயக்குவது காலம்!
9. காலத்தினை இயக்குவது கால கிரகங்கள்
10. கிரகங்களை இயக்குவது "பரம்பொருள்!"
11. பரம்பொருளுக்கும், மனிதனுக்கும் இடையில் எத்தனை விதவிதமான பாலங்கள் பார்த்தீர்களா? அன்பர்களே!

ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்:
1. காலத்தினை வருடம், மாதம், வாரம், ஹோரை என்று நான்கு பெரும் பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது!
2. இதில் வருடாதிபதியின் பலம் 25% ஆகும்!
3. மாத அதிபதியின் பலம் 50%.
4. வார அதிபதியின் பலம் 75%.
5. ஹோரா அதிபதியின் பலம் 100%.
6. எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகிய நால்வரில் ஹோரா அதிபதியே அதிபலம் பெற்று விளங்குகிறார்.
7. இதிலிருந்து ஹோரைதான் அதிக வலிமை பொருந்தியது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

வருட மாத வார ஹோரா
அதிபதி 25% அதிபதி 50% அதிபதி 75% அதிபதி 100%

8. ஹோரா கிரகம் தான் 1 மணி நேரத்தின் CM போன்றவர். அவர் வைப்பதுதான் சட்டம்!!
9. ஒரு நாள் முதல்வர் போன்று 1 மணி நேர முதல்வர் ஹோரா கிரகம் ஆவார்!

ஹோரையின் குணங்கள்; செயல்கள்:
சூரிய ஹோரைகள்: (உத்தியோக ஹோரை)
அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல், அரசியல் தலைவர்களை சிந்தித்தல், அரசு உதவியைத் தேடல், தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும், பெரியோர்களின் ஆதரவைப் பெறுதல், சிவ வழிபாடு, அரசு பதவி ஏற்றல், பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல், பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை வகையிலான செயல்களை செவ்வனே செய்யலாம்.

சந்திரன் ஹோரை: (அமுத ஹோரை)
1. சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாகும் ஹோரையாகும் இது! உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விசயம் பேசலாம், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம், "கற்பனையை" மூலதனமாக கொண்ட எந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்!
2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையை தேர்ந்தெடுக்கலாம்!
3. அம்மாவசையன்றும், மறுநாள் பிரதமை அன்றும் சந்திர ஹோரையை தவிர்க்கவும்! தேய்பிறை சந்திர ஹோரையை தவிர்ப்பது நலம்!
செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும் ஹோரை)

1. கடன் வாங்குதல் கூடாது. கடனை திருப்பி கொடுக்கலாம்! எந்த ஒரு காரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும் ஓரையாகும்! இது ஒரு காரசாரமான சண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
2. அனைவரும் அனைத்திலும் உஷார்! செவ்வாய் போர் கிரகம்!
3. புதிய முயற்சிகளை கட்டாயம் தவிர்க்கவும்.

புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)

1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், கல்வி, படிப்பு, கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஓரையில் செய்யலாம்!
2. கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல் நூல் ஆராய்ச்சி போன்றன்யாவும் புதன் ஓரையில் வெற்றிகரமாக செய்யலாம்!
3. வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்!
4. திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம்!
5. எல்லா சுயகாரியங்களையும் புத ஓரையில் புஷ்டியாக வெற்றியாக செய்யலாம்!
6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஓரை இது!

குரு ஹோரை: (தன ஹோரை)

1. இது 100% சுப ஒரையாகும்! குரு ஓரையில் எல்லா வகையான சுபகாரியங்களையும் செய்யலாம்!
2. கல்வி, வித்யாரம்பம், ஆலயம் வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடை ஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
3. எல்லா விதங்களிலும் சுபத்தையும், லாபத்தையும் அளிப்பது குரு ஓரையாகும்!

சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)

1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல் செய்ய உகந்த ஓரை, பணம் கொடுக்கக் கூடாது!
2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதிய Account ஏற்படுத்துதல், (A/c Open பண்ணுதல்).
3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
4. விருந்தினராக செல்லலாம்! பெண் பார்க்க சென்றால் வெற்றி உறுதி!
5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்த ஓரை சுக்கிர ஓரையாகும்!

சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)

1. சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட கூடாது! மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம் உண்டாக்கும்!
2. கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான் நிகழும்! உஷார்!
3. இந்த ஓரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது!
4. Switch Off செய்யப்பட்ட மொபைல் மாதிரி ஆகிவிட வேண்டியதுதான்!

சுப ஹோரைகள்: (நைசர்க சுபர்கள்)

1. குரு
2. சுக்கிரன்
3. புதன்
4. சந்திரன்

அசுப ஹோரைகள்: (நைசர்க பாபிகள்)

1. செவ்வாய்
2. சனி

சூரியன் அசுப ஹோரை அல்ல!

கிழமைகளுக்கும் ஹோரா கிரகத்திற்கும் என்ன உறவுமுறை என்பதனை பொருத்தே ஹோரையின் செயல்பாடுகள் அமைகிறது!

ஹோரையின் நுட்பங்கள்:
கிரகங்களின் நட்புகள் (Friends)

சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
சந்திரன் = குரு, செவ்வாய், சனி
செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
புதன் = சுக்கிரன், சனி
குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
சுக்கிரன் = சனி, புதன்
சனி = சுக்கிரன், புதன்

கிரக சமம் (Nutral) (No Friends)

சூரியன் = புதன்
சந்திரன் = செவ்வாய்
செவ்வாய் = சுக்கிரன்
புதன் = சூரியன்
குரு = சனி
சுக்கிரன் = செவ்வாய்
சனி = குரு

கிரக பகை விவரம்

சூரியன் x சுக்கிரன், சனி
சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
செவ்வாய் x புதன், சனி
புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
குரு x சுக்கிரன், புதன்
சுக்கிரன் x சூரியன், சந்திரன்
சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்

குறிப்பு:

வாராதிபனும், ஹோராதிபனும் ஒருவருக்கொருவர் பகையாக இருந்திடில் அந்த ஹோரை சரியாக செயல்படாது!

உதாரணம்:

ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரை தவறைச் செய்யும்! காரணம் சூரியனும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.

சூ x சுக்

தோல்வி தரும் கிரக ஓரைகள்:

கிழமைகள் தோல்விகள்
ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை
தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.
புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக
செயல்படாது.
குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை தவறை
செய்யும்! உஷார்!

கிழமைகள் ஆகாத ஓரைகள்

ஞாயிறு சுக்கிரன், சனி
திங்கள் சுக்கிரன், புதன், சனி
செவ்வாய் புதன், சனி
புதன் குரு, சந்திரன், செவ்வாய்
வியாழன் சுக்கிரன், புதன், சந்திரன்
வெள்ளி குரு, சந்திரன், சூரியன்
சனி சந்திரன், செவ்வாய், சூரியன்

புதன் கிழமை குரு ஓரை நடக்கும்போது குரு சுப ஓரை என்று எதையும் செய்யலாகாது! இவ்வாறு ஹோரா சாஸ்திரத்தில் இன்னும் பலவித நுணுக்கங்கள், நுட்பங்கள் உள்ளன!! இனி அதையும் கொஞ்சம் பார்க்கலாம்!

கடுமையான பாதிப்பை தரும் கிரக ஓரைகள்:

பாபகிரகங்களின் கிழமைகளில் (ஞாயிறு, செவ்வாய், சனி) பகைவர், பாபிகளின் ஓரைகள் பயங்கரமான பாதிப்புகளை தந்து விடுகிறது!

கிழமை ஓரை
ஞாயிறு x சனி
செவ்வாய் x சனி
சனி x செவ்வாய், சூரியன்

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சனி ஓரையும், செவ்வாய் கிழமை வரும் சனி ஓரியும் பொல்லாத ஒரையாகும்! இதன் கொடுமையை அனுபவித்தவரிகளிடம் தான் கேட்டறிய வேண்டும்!
சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஓரைகள் கடுமையான பாதிப்புகளை தந்து விடுகிறது. அதிலும் சனிக்கிழமையில் செவ்வாய் ஓரை மிக கடுமையாக இருக்கும்!

கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள்:

கிழமைகள் ஓரைகள்
ஞாயிறு சூரியன், புதன், குரு, சந்திரன்
திங்கள் சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய் குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்
புதன் சுக்கிரன், புதன், சூரியன்
வியாழன் குரு, சனி, சந்திரன், சூரியன்
வெள்ளி சுக்கிரன், புதன்
சனி குரு, சுக்கிரன், புதன்

பிறந்த ஹோரை பலன்:

1. ஒருவன் எந்த ஓரை நடக்கும்போது பிறந்தாரோ அதுவே அவரின் ஜென்ம ஒரையாகும்!
2. பிறந்த ஓரை கிரகம் அவருக்கு எப்போதும் நன்மையே செய்யும்!
3. பிறப்பு ஓரை கிரகத்தின் நட்பு கிரக ஓரைகளும் நன்மை செய்யும். பகை ஓரை கிரகங்கள் தீமை செய்யும்.
4. பிறந்த ஓரை கிரக சுபாவகுனம் அச்சாதகரிடத்தில் காணப்படும்.
5. ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு பிறந்தால் அப்போது நடக்கும் புதன் ஓரையே அவரது பிறப்பு ஒரையாகும். எனவே, புதன் அவருக்கு சுபத்தையே செய்யும்.

சிறப்பு விதிகள்:

1. யாவருக்கும் "ஜென்ம லக்னாதிபதியான" கிரகத்தின் ஓரை எப்போதும் நன்மையே செய்யும்!
2. மேலும் இந்த லக்னாதிபதியின் ஹோரையில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உறுதி! பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல!
3. யோகி, இந்து லக்னாதிபதியாக வருகின்ற கிரக ஓரைகளும் சுபத்தையே செய்யும்!
4. ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற கிரக ஓரையும் எப்போதும் சுபத்தையே செய்யும்!
5. லக்னத்தின் 6, 18, 12, பாதகாதிபதிகள் ஓரை நன்மை செய்யாது!
6. நீச்சம், அஸ்தமனம், பகை, வக்கிரம் பெற்ற கிரக ஓரைகள் சுபத்தை செய்யாது!
7. தசா புத்தியாக எந்த கிரகமோ! அந்த கிரகங்களின் ஹோரையில், அந்த தசாபுத்தி பலன் நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்!
8. உதாரணமாக சூரிய தசை புதன் புத்தி எனில் சூரியன் மற்றும் புதன் ஓரைகளில் பலன்களை எதிர்பார்க்கலாம்! இது நன்மை செய்யும் தசாபுத்தி எனில் நன்மை! தீமை தரும் தசாபுத்தி எனில் அந்த கிழமை, ஓரைகளில் எச்சரிக்கையாக இருந்திடலாம்!
9. சூரிய தசா/புத்தி நடப்பவர்களுக்கு சூரிய ஓரைகளில் தாம் பலன் (+/-)கள் நடக்கும்.
10. சந்திரன் தசா/புத்தி நடப்பில் உள்ளவர்களுக்கு சந்திர ஓரையில் தான் பலன்கள் நடக்கும்.
11. இதே போல மற்ற கிரக தசாபுத்திகளில் அந்த கிரக ஓரைகளில் அதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்!
12. ராகு தசா/புத்தியில் ராகு நின்ற ராசியாதிபதி கிரக ஓரையிலும் பலன் தரும்!
13. கேது தசா/புத்தியில் கேது நின்ற ராசியதிபதியின் கிரக ஓரையிலும் பலன் தரும்!
14. பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது சேர்க்கை பெற்றிருப்பின் சூரியன், சந்திரன் ஓரைகள் சரியாக பலன் தராது!
ஜெயங்கொண்டான் கொளஞ்சி B.E.,

Sunday, 24 August 2014

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி!!!

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

தூத்துக்குடி பாலு


இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?

1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2. கணப் பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)

பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.

பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.



6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி ---> பிள்ளை ராசி

மேஷம் ---> கன்னி
தனுசு ---> ரிஷபம்
துலாம் ---> மீனம்
கும்பம் ---> கடகம்
சிம்மம் ---> மகரம்
மிதுனம் --->விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.



7. ராசி அதிபதி

ஒன்பது கிரகங்களுக்கும் பிற கிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.

சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)

சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)

செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)

புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)

குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)

சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)

சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)

ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்

ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை

இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

8. வசியப் பொருத்தம்

பெண் ராசி --->பையன் ராசி

மேஷம் ---> சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் ---> கடகம், துலாம்
மிதுனம் ---> கன்னி
கடகம் ---> விருச்சிகம், தனுசு
சிம்மம் ---> மகரம்
கன்னி ---> ரிஷபம், மீனம்
துலாம் ---> மகரம்
விருச்சிகம் ---> கடகம், கன்னி
தனுசு ---> மீனம்
மகரம்---> கும்பம்
கும்பம் ---> மீனம்
மீனம் ---> மகரம்
- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜீ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்.

10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்


11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இல்லாதது

கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது

அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.

சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர்.