Tuesday, 6 October 2015

Brinjal Rice !!!

வாங்கிபாத் - Vangi Bath Recipe - Brinjal Rice - No onion No Garlic Recipe


இதில் வெங்காயம் , தக்காளி சேர்க்க தேவையில்லை. இது No onion No Garlic Recipe.

இதற்கு பச்சை கத்திரிக்காயினை பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி பச்சை கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகும் மசிந்துவிடாமல் இருப்பதால் சாதத்தினை கலந்த பிறகு நன்றாக இருக்கும்.

இதில் புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கத்திரிகாயுடன் சேர்த்து வேகவிடவேண்டும்.முதலில் கத்திரிக்காயினை கண்டிப்பாக 1 - 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு புளி தண்ணீர் சேர்க்கவும்.  

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  பச்சை கத்திரிக்காய் - 1/4 கிலோ
   .  வேகவைத்த சாதம் - 3 கப்
   .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடித்து கொள்ள :
   .  கடலைப்பருப்பு - 1 மேஜை கரண்டி
   .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
   .  காய்ந்த மிளகாய் - 2 , தனியா - 1 தே.கரண்டி
   .  வேர்க்கடலை - 1 மேஜை கரண்டி

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க


செய்முறை :
   .  வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு வறுத்து ,சிறிது நேரம் ஆறவைத்த பிறகு பொடித்து கொள்ளவும்.

   .  கத்திரிகாயினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புளியினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு தாளித்து அத்துடன் நறுக்கிய கத்திரிக்காயினை போட்டு 1 நிமிடம்  நன்றாக வதக்கவும்.


  .  இத்துடன் மஞ்சள் தூள் + சிறிது உப்பு சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

   .  பிறகு இதில் கரைத்து வைத்து இருக்கும் புளி கரைசலினை ஊற்றி நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.


 .  கத்திரிகாயில் தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அதில் பொடித்து வைத்துள்ள பொடி + கருவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.


 .  இதில், வேகவைத்த சாதத்தினை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். ( அவரவர் காரத்திற்கு ஏற்ப பொடியினை சேர்த்து கொள்ளவும். )


  .  சுவையான சத்தான வாங்கிபாத் ரெடி. இதனை வறுவல், சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.




    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images
    Image result for vaangi bath images

Monday, 5 October 2015

Oneline Humors!!!

Humors...
Regular naps prevent old age, especially if you take them while driving.
😀😀
Having one child makes you a parent; having two you are a referee.
😀😀
Marriage is a relationship in which one person is always right and the other is the husband!
😀😀
I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash.
😀😀
A child's greatest period of growth is the month after you've purchased new school uniforms.
😀😀
Don't feel bad. A lot of people have no talent.
😀😀
Don't marry the person you want to live with, marry the one you cannot live without, but whatever you do, you'll regret it later.
😀😀
You can't buy love, but you pay heavily for it.
😀😀
Bad officials are elected by good citizens who do not vote.
😀😀
Laziness is nothing more than the habit of resting before you get tired.
😀😀
Marriage is give and take. You'd better give it to her or she'll take it anyway.
😀😀
My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.
😀😀
A successful marriage requires falling in love many times, always with the same person.
😀😀
You're getting old when you enjoy remembering things more than doing them.
😀😀
It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.
😀😀
Real friends are the ones who survive transitions between address books.
😀😀
Saving is the best thing. Especially when your parents have done it for you.
😀😀
Wise men talk because they have something to say; fools talk because they have to say something.
😀😀
They call our language the mother tongue because the father seldom gets to speak!
😀😀
Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but then the thought of long life will never come!
😀😀
Why do couples hold hands during their wedding? It's a formality just like two boxers shaking hands before the fight begins!
😀😀
Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.
😀😀
It's funny when people discuss Love Marriage vs Arranged. It's like asking someone, if suicide is better or being murdered.
😀😀
There is only one perfect child in the world and every mother has it.
😀😀
There is only one perfect wife in the world and every neighbor has it!
Cheers !!!

முடி அடர்த்தியாக வளர---இய‌ற்கை வைத்தியம்!!!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…
 
* வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.

* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக ‘மசாஜ்’ செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.
* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.
* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.
* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:
* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.