Thursday 13 October 2016

சஞ்சீவி சூரணம்!!!(Herbal Powder for All Diseases)


                                 Kandha Rasam





சரஸ்வதி கடாட்சம் தரும் சஞ்சீவி சூரணம்
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்
பரமசிவன் பார்வதிதேவிக்கு உபதேசித்த கற்ப மருந்தான சஞ்சீவி சூரணம்
சதகுய்பை 35 கிராம்
சீரகம் 35 கிராம்
மகிழ வித்து 35 கிராம்
அதிமதுரம் 35 கிராம்
லவங்கய் பட்டை 35 கிராம்
தேத்தான் வித்து 17 1/2 கிராம்
கொத்தமல்லி விதை 216 கிராம்
சீனிச் சர்க்கரை 310 கிராம்
மேற்பட்ட எல்லாவிதமான சரக்குகளை
பொடி செய்து சர்கரையும் சேர்த்து காலை
மாலை இருவேளை ஐந்து விரலால் அள்ளும்
அளவு சாப்பிட்டு வென்னீர் குடிக்கவும்.
பயன்கள்
தேகம் திடப்படும் ஈரல் குலை வலுப்படுத்தும் பித்தம் அனைத்தும் தீரும் நெஞ்சு திடப்பட்டு
உறுதியாகும் தலை மூளை செழிக்கும்
தலைவலி பிடரி வலி தீரும் கண்களில்
நீர் வடிதல் தீர்ந்து அதிக ஒளி மிகும் இருதய
நோய்கள் தீர்ந்து இருதயம் வலுவுண்டாகும்
பசி அதிகரிக்கும் தூக்கமின்மை நீங்கி சுக
நித்திரை உண்டாகும் வயிற்றின் நோய்கள்
அனைத்தும் நீங்கி கிருமிகள் வெளியேறும்
கல்லடைப்பு நீரடைப்பு நீங்கி இடுப்பு வலி
குணமாகும் வாய் குளறல் நீங்கி தெளிவான
பேச்சு வரும் பேய்க் குணங்கள் மாறும்
காது இரைச்சல் நீங்கி காதுகள் நன்றாக
கேட்கும் தொண்டைப் புண் ஆறும் சேத்துமம்
நோய்கள் அனைத்தும் குணமாவதோடு
வாய் மூக்கில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
மற்றும் பல நோய்கள் நீங்கி
நற்குணங்கள் தரும்
ஞானம உண்டாகும்
நல்ல எண்ணம் உண்டாகும்
யோகம் கைகூடும்
சித்தியுண்டாகும்
இக்கற்ப மருந்தை மூன்று மண்டலம்
உண்டு வர கல்வியில் சிறந்து வல்லவனாகி
புலவனாவான் என்றும் சாஸ்திரம் கூறுகிறது
இந்த சஞ்சீவி சூரணம் அனைத்து நோய்களுக்கு கொடுத்த அனுபவ மருந்து
குறிப்பாக இருதய ஓட்டைக்கு இதுவும்
மருதம் பட்டை கசாயமும் கொடுத்து
வெற்றி கண்டது
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்தியசாலை
மம்சாபுரம் 626110
திருவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி 9345168097

No comments:

Post a Comment